Tuesday, October 20, 2009

மியாவ்...மியாவ்.. பூன... மீசை உள்ள பூன...



click to Enlarge the Image

இடுகை தலைப்பு, படம் உபயம் நன்பர் பாலா.
.
.
.

30 comments:

சின்னப் பையன் said...

super...:-)))

ஈரோடு கதிர் said...

சரிதான்

வால்பையன் said...

இன்னும் கோபம் தீரல போலயே!

எறும்பு said...

அருமை.குறிப்பா பக்ஷேவின் துண்டை இணைக்கும் மண்டை ஓடு சூப்பர்

ரவி said...

நன்றி சின்னப்பையன்

Prathap Kumar S. said...

டக்கரு

Prathap Kumar S. said...

டக்கரு

JesusJoseph said...

திருமாவை என்னுடைய ஆதர்ச நாயகனாக இந்த ஆண்டின் ஆரம்பம்வரை நம்பியிருந்தேன். இன்றைக்கு திரும்பிப்பார்க்கையில் நான் ஏமாளி மட்டுமல்ல, ஒரு கோமாளியும் கூட என்று உணர்கிறேன். //

உங்களை கோமாளியாக்கின திருமாவை பழி வாங்க தொடங்க்விடீர்கள் போல??? ;-)

நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.com

மகேஷ் : ரசிகன் said...

Super... :)

பீர் | Peer said...

புரியல ரவி.. அவர் என்ன செஞ்சிருந்தா நீங்க சந்தோஷப்பட்டிருப்பீங்க?

ரவி said...

பிரபாகரனோடு இருந்திருந்தால் உங்களையும் கொன்றிருப்போம் என்று கொலைகாரன் ராஜபக்சே சொல்லும்போது தமிழனுக்கு உரிய கொஞ்சம் நஞ்சம் தன்மானம் இருந்திருந்தால், மரியாதையாக பேசுங்கள், யாரிடம் பேசுகிறீர்கள் என்று நியாபகம் இருக்கட்டும், ஒரு இந்திய நாட்டின் பிரதிநிதியாக நான் இங்கே வந்துள்ளேன் என்று தன்னுடைய அடிப்படை உரிமையையாவது நிலைநாட்டியிருக்கலாம்.

அவன் சொன்னானாம், அதை இவர் காமெடியாக எடுத்துக்கொண்டாரம்.

என்ன காமெடி பீர் சார் இது ? நீங்கள் சொல்லுங்களேன் ?

ரவி said...

நன்றி எறும்பு

ரவி said...

நன்றி டிவிஆர் அய்யா

ரவி said...

நன்றி வால்ஸ்

ரவி said...

வால்ஸ், எழவு விழுந்தது என்னோட வீட்ல. கோபம் எப்படி தீரும் ?

ரவி said...

நாஞ்ஜில் நன்றி..

ரவி said...

ஜோஸ் நன்றி/\..

ரவி said...

நன்றி மகேஷ்..

thoaranam said...

நல்ல பதிவு!
- இறைமையுள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட(!) ஒரு ஜனாதிபதி எப்படி அப்பாவிப் பொதுமகனான திருமாவையும் கொன்றிருப்பேன் எனச் சொல்ல முடியும்?
- இதனூடாக இந்த மகிந்த பல அப்பாவி மக்களை தான் கொன்றிருப்பதை மிக வெளிப்படையாக அந்த ஜனாதிபதியென்ற அரியாசனத்திலிருந்தவாறே ஒப்புக் கொண்டதாகக் கருத முடியும்!
- தன்னையொரு அறிவுஜீவியாக வெளிப்படுத்திவரும் திருமா ஏன் தன் நுண்அறிவை வெளிப்படுத்தவில்லை?
முகிலன்
தோரணம்

பீர் | Peer said...

அவர் தமிழனோட கொஞ்ச நஞ்ச தன்மானத்தை காட்டாம வந்தது தான் உங்களுக்கு கோபமா?

அவர் அரசு பிரதிநிதியா போகலையே.. தன்னோட செலவில் போயிருக்கிறார். சரி.. இருக்கட்டும், அடுத்த நாட்டு அரண்மனைல போயி மஞ்சள் அரைத்து பணிபுரிந்தாயான்னு வீர வசனம் பேசிவிட்டு வருவதால் மட்டும் தமிழனுக்கு என்ன நியாயம் கிடைத்துவிடப்போகிறது, திருமா என்பவன் தன்னை வீரனாக அடையாளப்படுத்திக் கொள்வதைத்தவிர.

அந்நிய நாட்டு அரசவையில் வீரனாக தன்னை அடையாளப்படுத்துவதை விட, தன் இனத்திற்காக தனியொருவன் அவமானத்தையும் தாங்கி வருவதே அறிவுடைமை என்று நான் நினைக்கிறேன்.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். - குறள்.

பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.

முத்துகுமரன் said...

முதலில் இலங்கை சென்றது இந்திய அரசின் அதிகாரப்பூர்வு குழு அல்ல, காங் திமுக கூட்டணி எம்பிக்களின் குழு. திருமா செல்லும் போதே குறிப்பிட்டார் அந்த மக்களுக்கு ஆறுதல் சொல்ல எனக்குக் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு இந்த பயணம்பயன்படுத்திக் கொள்கிறேன். மேலும் அந்த குழுவிற்கு தலைமை ஏற்றுச் சென்றது டி.ஆர்.பாலு. அவர்தான் கண்டித்திருக்க வேண்டும் ராஜபக்சேவை, அவருக்கு பசில் ராசபக்சேவையும்ம், கோத்தபாய ராஜபக்சேவையும் ஆரத் தழுவி அன்பைப் பொழியவே நேரம் போதவில்லை. தன் சக ''இந்திய'' பாராளுமன்ற உறுப்பினர் அவமானப்படுத்தப்பட்டது குறித்து ''இந்திய தேசிய உணர்வு'' ஒரு மயிரானுக்கும் வரவில்லை. அந்த பயணத்தில் எடுக்கப்பட்டப் பட்ட படங்களில் இறுக்கமாக இருக்கும் ஒரே மனிதர் திருமா மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் சுற்றுலாப்பயணிகளைப் போலவும் நீண்ட நாட்களாக காணத நண்பர்களை காண்பதுபோல் புன்முறுவல் பூத்திருந்தார்கள்.

திருமாவின் ஜூனியர் விகடன் பேட்டியை முடிந்தால் வாசித்து பாருங்கள். அவர் நாகரீகமாக தனது வேதனையை பதிவு செய்திருக்கிறார். பீர் தன்னுடைய பின்னுட்டத்தில் திருமாவின் அணுகுமுறையை சரியாக புரிந்து கொண்டிருக்கிறார்.அப்படியே திருமா எதிர்த்துப் பேசி இருந்தால், அவரை நம் பாரளுமன்ற உறுப்பினர்களை அவமானப்படுத்தி இருப்பார்க்கள். நாகரீகமற்று நடந்து கொண்டார் என்றும், சுற்றுப்பயணம் தோல்வியடையா திருமாவின் பொறுப்பற்றத்தனமான நடத்த்தையே காரணம் என்றும் ஓலமிட்டு இருப்பார்கள். திமுக கூட்டணியில் இருந்தாலும் அவர் ஒட்டாது தனித்தீவாகத்தான் இருக்கிறார், நடத்தப்படுகிறார். தலித்தாகவே இருக்கிறார்.

ஈழத்தமிழர்களுக்கு 4 நாட்களில் கலைஞர் விடுதலை வாங்கித் தந்துவிட்டதாக பூரித்து சுவரொட்டி ஒட்டும் அளவிற்குதான் திமுக இருக்கிறது. அவர்களை குறை சொல்லவோ, கேலி செய்யவோ யாருக்கும் இங்கு துணிச்சல் இல்லை. ஏதேனும் செய்துவிட முடியாதா என்ற ஆதங்கத்தில் இருப்பவரைத்தான் நக்கல் நையாண்டி. கருணாநிதி விமான நிலையம் வரை வந்து வரவேற்று அழைத்துச் செல்ல காரணம் என்ன? தன் வசனத்திற்கு மாறாக வேறெதுவும் வந்துவிடக்கூடாது எனத்தானே? 58ஆயிரம் மக்களை விடுவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று இலங்கை ஊடக அமைச்சர் சொன்னதை யார் இங்கு கவனிக்கிறார்கள். கலைஞர் பொய் சொல்கிறார் என எவரும் கார்ட்டூன் போடுகிறார்களா என்ன?

சீனிவாசன் said...

அங்க இலங்கையில் பொத்ிக்கிட்டு இருந்துட்டு இங்கே வந்து "ராஜபாக்சே போர் குற்றவாாி" என முநகும் பூனை ...சிறுத்தை அல்ல

பிரபாகர் said...

//அவர் தமிழனோட கொஞ்ச நஞ்ச தன்மானத்தை காட்டாம வந்தது தான் உங்களுக்கு கோபமா?

அவர் அரசு பிரதிநிதியா போகலையே.. தன்னோட செலவில் போயிருக்கிறார். சரி.. இருக்கட்டும், அடுத்த நாட்டு அரண்மனைல போயி மஞ்சள் அரைத்து பணிபுரிந்தாயான்னு வீர வசனம் பேசிவிட்டு வருவதால் மட்டும் தமிழனுக்கு என்ன நியாயம் கிடைத்துவிடப்போகிறது, திருமா என்பவன் தன்னை வீரனாக அடையாளப்படுத்திக் கொள்வதைத்தவிர.

அந்நிய நாட்டு அரசவையில் வீரனாக தன்னை அடையாளப்படுத்துவதை விட, தன் இனத்திற்காக தனியொருவன் அவமானத்தையும் தாங்கி வருவதே அறிவுடைமை என்று நான் நினைக்கிறேன்//

பீர்,

உங்களின் கருத்துக்கு நான் மாறுபட்டு ரவியை முழுதும் ஆதரிக்கிறேன். ஏனெனில், தமிழகத்திலேயே விடுதலைப்புலிகளை பற்றி வீராவேசமாய் பேசியதில் முதல் இடம் திருமாவுக்குத்தான். பிரபாகரன் படத்தினை தடையிருந்த போதும் துணிச்சலாய் உபயோகப்படுத்தியவர் அவர்தான். அந்த இடத்தில் சிரித்தவாறு மைன்ட் யுவர் வோர்ட்ஸ் என்றாவது சொல்லியிருக்கலாம். நகைச்சுவையான விஷயமா அது?

பிரபாகர்.

Suresh Kumar said...

Nakkal

ரவி said...

முகிலன், நன்றி..

ரவி said...

அந்நிய நாட்டு அரசவையில் வீரனாக தன்னை அடையாளப்படுத்துவதை விட, தன் இனத்திற்காக தனியொருவன் அவமானத்தையும் தாங்கி வருவதே அறிவுடைமை என்று நான் நினைக்கிறேன்.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். - குறள்.&&&&



பீர் சார். திருமாவை எதிர்கொள்ள ராசபக்சே தயாராகவே இருந்திருப்பான். ஆனால் அந்த தயாரிப்பு, மேடையெங்கும் முழங்கும் அவரிடமில்லையே என்ற ஆதங்கம்தான்.

உன்னுடைய வேலையை பார். என்னை பற்றி பேசாதே என்று முகத்துக்கு நேராக சொல்லும் துணிவு இல்லையே ?

&&&&

அந்நிய நாட்டு அரசவையில் வீரனாக தன்னை அடையாளப்படுத்துவதை விட, தன் இனத்திற்காக தனியொருவன் அவமானத்தையும் தாங்கி வருவதே அறிவுடைமை என்று நான் நினைக்கிறேன்.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். - குறள்.

&&&

நீங்கள் சொல்லும் இந்த குறள் எல்லாம் சங்ககால மன்னராட்சியாக இருந்திருந்தால் பரவாயில்லை. இந்தியாவும் ஜனநாயக நாடு, இலங்கையும் அப்படியே..

அப்படிப்பட்ட அவமானத்தை தாங்கி வந்து திருமா என்ன சாதித்துவிட்டார் சொல்லுங்கள் ???

பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதும், பாலுவிடமும் கனிமொழியிடமும் கலைஞரிடம் நல்ல பேர் எடுப்பதுமா முக்கியம் ? அவ்வளவு பேரை கொன்றொழித்த ஒருவனை பார்க்கும்போதே ரத்தம் கொதிக்கவேண்டாமா ?

ஜார்ஜ் புஷ்ஷை நோக்கி ஷூவை எறிந்த நிருபரின் துணிவு கூட மறத்தமிழன், அடங்க மறுக்கவும், அத்து மீறவும், துணிந்து எழவும், திருப்பி அடிக்கவும் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு கற்றுக்கொடுத்த திருமா அண்ணனிடம் இல்லாமல் போனது ஏனோ ???

ரவி said...

%%%%%%%%

ஈழத்தமிழர்களுக்கு 4 நாட்களில் கலைஞர் விடுதலை வாங்கித் தந்துவிட்டதாக பூரித்து சுவரொட்டி ஒட்டும் அளவிற்குதான் திமுக இருக்கிறது. அவர்களை குறை சொல்லவோ, கேலி செய்யவோ யாருக்கும் இங்கு துணிச்சல் இல்லை. ஏதேனும் செய்துவிட முடியாதா என்ற ஆதங்கத்தில் இருப்பவரைத்தான் நக்கல் நையாண்டி. கருணாநிதி விமான நிலையம் வரை வந்து வரவேற்று அழைத்துச் செல்ல காரணம் என்ன? தன் வசனத்திற்கு மாறாக வேறெதுவும் வந்துவிடக்கூடாது எனத்தானே? 58ஆயிரம் மக்களை விடுவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று இலங்கை ஊடக அமைச்சர் சொன்னதை யார் இங்கு கவனிக்கிறார்கள். கலைஞர் பொய் சொல்கிறார் என எவரும் கார்ட்டூன் போடுகிறார்களா என்ன?

Wednesday, October 21, 2009

^^^^^^^^^


முத்துக்குமரன்,

எதிர்பார்க்கவேண்டிய இடத்தில் தானே எதிர்பார்க்க முடியும் ? அப்படி எதிர்பார்த்து அந்த எதிர்பார்ப்பில் ஒரு சதவீதம் கூட செய்ய முயற்சிக்கவில்லை என்றால் ஏமாற்றம் வரத்தானே செய்யும் ?

ஈழத்தமிழர்களுக்காக கலைஞர் எதையாது செய்துவிடுவார் என்பதை யாரும் நம்பமாட்டார்கள். அது கலைஞருக்கே தெரியும். போஸ்டர் அடிக்கும் அடிப்பொடிகளை பற்றி நமக்கென்ன கவலை ?

ராஜபக்சேவுக்கு பொன்னாடை போர்த்தவேண்டும் என்று சொந்த காசை போட்டு பொன்னாடை வாங்கியவர்களை அல்லவா வசைபாடவேண்டும் ?

ஆதி மனிதன் said...

//ஜார்ஜ் புஷ்ஷை நோக்கி ஷூவை எறிந்த நிருபரின் துணிவு கூட மறத்தமிழன், அடங்க மறுக்கவும், அத்து மீறவும், துணிந்து எழவும், திருப்பி அடிக்கவும் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு கற்றுக்கொடுத்த திருமா அண்ணனிடம் இல்லாமல் போனது ஏனோ ???//

பின்னிட்டீங்க ரவி. நான் வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தேன். நீங்கள் பதிவே செய்துவிட்டீர்கள். அமெரிக்க அதிபர் புஷ்யை விட ராஜபக்சே என்ன அவ்வளவு பெரிய ஆளா? இல்லை நாடே அழிந்துவிட்ட நிலையிலும் ஒரு இராகியனுக்கு இருந்த தைரியமும், தன்மானமும் ஒரு தமிழன், அதுவும் பல லட்சம் மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு இந்திய பாராளுமன்ற உறுபினருக்கு இல்லாமல் போய்விட்டதா?

ரவி said...

புரிந்துகொண்டமைக்கு நன்றி ஆதி மனிதன்..

சூர்யகதிர் said...

மக்கள் கஷ்டப் படுகிறார்கள் என்று ஒருவாரம் களித்து தொண்டை கிழிய கத்துவதை விட ராஜா பாக்சை காமெடி பண்ணிய போது மக்கள் படும் துன்பத்தை பார்ப்பதை விட நானும் செத்து மடிதிருக்கலாம் என்று கூறி இருந்தால் ராஜா பாக்சை மூக்கு உண்டைந்த்ருகும்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....