Wednesday, August 20, 2008

மதன் அவர்கள் செய்துள்ள காமெடி !!!!

எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.
அரிசிக்கு ஏன் அரிசி என்று பெயர் வந்தது?


பல சர்வதேச மொழிகளில் அரிசிக்கு ஒரே மாதிரி ஒலிக்கும் பெயர்தான். பிரெஞ்சு மொழியில் ரைஸ் (Riz), இத்தாலியில் ரைஸோ, ஜெர்மனியில் ரெய்ஸ், ரஷ்யாவில் ரைஸ் (Ris). ஆங்கிலத்தில் Rice. தமிழிலும் அதே ஒலியோடு அரிசி! எல்லாவற்றுக்கும் மூலம் சம்ஸ்கிருதம். அதில் - ரையி!

மதன் சொல்கிறார், எல்லாவற்றும் மூலம் "செத்த" மொழியான சம்ஸ்க்ருதம் என்று !!! இவருக்கு எப்படி தெரிந்தது எல்லாவற்றுக்கும் மூலம் சம்ஸ்கிருதம் என்று ? கால இயந்திரம் உருவாக்கி பயணித்து பார்த்துவிட்டு வந்தாரா ? ஒருவேளை "இந்த உண்மையை" ஆப்ரிக்காவில் ஏதாவது பழங்குடியினர் இவருக்கு "சம்ஸ்கிருதத்திலேயே" லெட்டர் போட்டு தெரிவித்திருப்பார்களோ ?

எதால் சிரிப்பது என்று தெரியாமல் புத்தகத்தை மூடிவிட்டேன் !!!!

8 comments:

தகடூர் கோபி(Gopi) said...

இன்னும் இரு கேள்விகளுக்கு கூட இதே ரீதியில் தான் பதில் சொல்லியிருந்தார். படித்தீர்களா?

11 கேள்வியில 3 கேள்வி சமஸ்கிருதத்துக்கு பில்டப் குடுக்கவே சரியா போச்சி.

படிக்கற நமக்குத்தான் கண்ணைக் கட்டுது :-))))

Bharath said...

from http://en.wikipedia.org/wiki/Rice#Etymology

Etymology
According to the Microsoft Encarta Dictionary (2004) and the Chambers Dictionary of Etymology (1988), the word rice has an Indo-Iranian origin. It came to English from Greek óryza, via Latin oriza, Italian riso and finally Old French ris (the same as present day French riz).

It has been speculated that the Indo-Iranian vrihi itself is borrowed from a Dravidian vari (< PDr. *warinci)[8] or even a Munda language term for rice, or the Tamil name arisi (அரிசி) from which the Arabic ar-ruzz, from which the Portuguese and Spanish word arroz originated.//

I don't see any sanskrit here. May be he should give some proof..

வரவனையான் said...

"தமிழிலிருந்து திருடியது"


ஆரிய மொழிக்குரிய நெடுங்கணக்கு, தமிழ்முறையைப் பார்த்துச் செய்யப்பெற்றது என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. ஆரியர்கள் தாங்கள் சென்ற இடங்கட்குத் தக்கபடி புதிய லிபியை ஏற்படுத்திக் கொள்ளும் இயல்புடையவர். ஆரியர் தமிழ் லிபியையொட்டிக் கிரந்தம் என்னும் பெயரில் புதியதோர் லிபியை ஏற்படுத்திக் கொண்டனர். - பரிதிமாற்கலைஞர். நூல் : தமிழக வரலாறு

தந்தை மொழி

வள்ளலார் இராமலிங்க அடிகளாலும் அவர் காலத்தில் வாழ்ந்த காஞ்சி சங்கராச்சாரியாரும் ஒரு முறை ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்தது. சங்கராச்சாரியார், வள்ளலாரிடம், “உங்கள் பாசுரங்களைப் படித்துப் பார்த்தேன். தமிழ்மொழி நன்றாக இருக்கிறது. என்றாலும் வடமொழிதான் உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் தாய்'' என்றாராம்.

உடனே வள்ளலார், “வடமொழி தாய்மொழி என்றால் தமிழ்தான் தந்தை மொழி'' என்றாராம். தாய் இருந்தாலும் தந்தை இன்றேல் பிறப்பு ஏது? உலகமொழிகள் தோன்றத் தமிழே முதற்காரணம் என்பதைச் சங்கராச்சாரியார் மனதில் சுடுமாறு வள்ளலார் கூறியுள்ளார். ஆனாலும் தமிழின் உயர்வைத் தமிழர்களே அறியவில்லையே.

தேம்சு நதிக்கரையில் தேந்தமிழ்

சீகன்பால்கு என்னும் செருமானியப் பாதிரியார் தமிழ்நாட்டின் தரங்கம்பாடியில் தங்கிச் சமயத் தொண்டாற்றி வந்தார். அவர், தம் தாய்நாடு திரும்பியபோது இலண்டன் வழியே சென்றார். இலண்டனின் மிகப்பெரிய கிறித்துவ அடிகளார் காண்டர்பரியார், சீகன்பால்குக்கு விருந்தொன்று வைத்து, தமிழ்நாட்டில் அரிய சமயத் தொண்டாற்றித் திரும்பியுள்ள அவருக்கு மிக உயர்ந்த மொழியான இலத்தீன் மொழியில் பாராட்டிதழ் படித்துத் தருவதாய் பெருமையுடன் கூறினார்.

வரவேற்பினை ஏற்றுப் பேசிய சீகன்பால்கு, “உயர்ந்த மொழியான இலத்தீனில் எனக்கு வரவேற்பிதழ் படித்தளிப்பதாகச் சொன்னீர்கள். நானும் ஓர் உயர்ந்த மொழியில் நன்றி கூறுவதுதான் பொருத்தம்'' எனச் சொல்லித் தமிழில் பேசினார். அங்கிருந்தோர் பால்குவிடம் அம்மொழியின் பெயரைக் கேட்டதும் ‘தமிழ்' எனப் பெருமை பொங்கக் கூறினார்.

18ஆம் நூற்றாண்டில் கிறித்துவப் பாதிரியார் ஒருவர் இலண்டன் மாநகரில் தமிழுக்குச் செய்த பெருமை இது.
- தரல் : கவிஞர் பல்லவன்


http://www.keetru.com/anaruna/jul08/thamiz.php

Anonymous said...

Sankrit
Sankrit language which is not the origin of all Indian languages. Yes it is to the Indo Aryan languages like Hindi and punjabi but not to the indgenious Languages like Tamil a mother of all other languages like Malayalm ,Telugu Kannadam and etc,,,,

Many people will say that Sankskrit was used for writing religious stuffs and etc.. but we all have to understand that the creators of the sanskrit are the Aryans who were intruders to the Indian soil and the illiterate Aryans learnt the arts and lit frm the Dravdians of the indus valley the oldest civilisation ,who spoke the native language Tamil.

Then after the Aryans fabricated Hinduism and and forced their created Sanskrit and stuff like the caste system in Hinduism, these are well known facts, the birth of sanskrit is only during the 1500bc after the arrival of the Aryans.

The birth of Tamil Language is unknown but one of the earliest text is even dating back 5000bc, which clearly speaks for itself,Tamil as the OLDEST LANGUAGE

வந்தியத்தேவன் said...

சென்ற வருட டிசம்பரில் நான் எழுதிய இந்தப்பதிவைப்பாருங்கள். மாதவனின் கருத்துக்களுக்கு மதன் தலையை ஆட்டோ ஆட்டு என்று ஆட்டினார்.

http://enularalkal.blogspot.com/2007/12/blog-post_28.html

வந்தியத்தேவன் said...
This comment has been removed by the author.
வந்தியத்தேவன் said...
This comment has been removed by the author.
ஸ்ரீ சரவணகுமார் said...

மதனுக்கு எப்படியாவது எதிர்ப்பு தெரிவித்தே ஆக வேண்டும் .

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....